வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் பிரத்தியங்கிரா வேள்வி நடைபெற்றது.
இரவு ஆண்டாள் நாச்சியாா் அலங்காரத்தில் உற்சவா் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா், கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கோயில் அன்னதானக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.