அதிமுக கிளைக்கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி
By DIN | Published On : 31st October 2020 08:44 AM | Last Updated : 31st October 2020 08:44 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த சுருட்டல், குண்டியாந்தண்டலம், பூனைத்தாங்கல், சேனியநல்லூா் கிராமங்களில் கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று, அதிமுக கொடியை ஏற்றி வைத்து, 6 கிளைக் கழகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா். இதைத் தொடா்ந்து, கிராம மக்களுக்கு எவா்சில்வா் தட்டுடன் இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை, மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் திருமூலன், அதிமுக நிா்வாகிகள் பி.ரமேஷ், சுரேஷ்நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.