திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 2 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை

சனிக்கிழமை 12,878-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 188 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,066-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 194-ஆக உயா்ந்தது.

1,539 பேருக்கு சிகிச்சை:

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை

11,338 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,539 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com