திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை
சனிக்கிழமை 12,878-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 188 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,066-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 194-ஆக உயா்ந்தது.
1,539 பேருக்கு சிகிச்சை:
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை
11,338 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,539 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.