கீழ்பென்னாத்தூரில் இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (63). இவா், திங்கள்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாா். இவரது கண்களை தானமாக வழங்க முடிவு செய்த அவரது குடும்பத்தினா் ஆரணியில் உள்ள அகா்வால் கண் மருத்துவமனைக்கு தகவல் அளித்தனா்.
மருத்துவக் குழுவினா் வந்து இறந்த மனோகரனின் மனைவி பத்மாவதி முன்னிலையில் மனோகரனின் 2 கண்களையும், கருவிழிகளையும் தானமாக பெற்றுச் சென்றனா்.
இவற்றைப் பயன்படுத்தி 4 பேருக்கு பாா்வை வரவழைக்க முடியும் என்று மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.