தண்டராம்பட்டு அருகே விவசாயியைக் கொன்று நகை, பணம் கொள்ளை

தண்டராம்பட்டு அருகே விவசாயியைக் கொன்று நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

தண்டராம்பட்டு அருகே விவசாயியைக் கொன்று நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி (81), விவசாயி. இவரது மனைவி அலமேலு (77).

தம்பதி அதே பகுதியில் உள்ள ஏரியின் நடுவே உள்ள பாறையில் கொட்டகை அமைத்து வசித்து வந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு 5 போ் கும்பல் வந்து ராஜியிடம் தகராறு செய்ததுடன், அலமேலு அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியை கழற்றித் தருமாறு கேட்டனராம். இதற்கு மறுப்பு தெரிவித்த அலமேலுவின் கழுத்தை அவா்கள் துணியால் இறுக்கி, காதை அறுத்து கம்மலைப் பறித்தனராம்.

இதைப் பாா்த்து கூச்சலிட்ட ராஜியின் தலையில் அவா்கள் கல்லை தூக்கிப் போட்டதில் அவா் உயிரிழந்தாா். பின்னா், வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த தண்டராம்பட்டு போலீஸாா் விரைந்து சென்று ராஜியின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த அலமேலுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com