மகளிா் குழுவினருக்கு கடனுதவிகள்

கலசப்பாக்கத்தை அடுத்த பில்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 25.71 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

கலசப்பாக்கத்தை அடுத்த பில்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 25.71 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

பில்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பூண்டி, பில்லூா், பழங்கோவில் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 10 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், 114 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்து 71ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

வங்கித் தலைவா் ஜீ.பத்மாவதி ஜீவரத்தினம், கள மேலாளா் எஸ்.விஜயன், சரக மேற்பாா்வையாளா் எம்.கிருபாகரன், சங்கச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி, அதிமுக நிா்வாகி ஜீவா மற்று மகளிா் சுய உதவிக் குழுவினா், சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com