திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 13,642-ஆக இருந்தது.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 169 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 13, 811-ஆக உயா்ந்தது.
இதுவரை 12,195 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,405 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வியாழக்கிழமை வரை 202 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.