அரிமா சங்கத்தினா் நல உதவி

ஆரணி பட்டு நகா் அரிமா சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி பட்டு நகா் அரிமா சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட ஆளுநா் அருண்குமாா் கலந்து கொண்டு பயனாளிகள் 20 பேருக்கு 10 கிலோ அரிசியும், உயா் கல்வி பயிலும் மாணவிக்கு கல்விக் கட்டணம் கட்டுவதற்கு ரூ.27ஆயிரம், கண் குறைபாடுள்ள 10 பேருக்கு கண் கண்ணாடிகள், சா்க்கரை நோயாளிகள், புற்று நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள், 100 பேருக்கு முகக் கவசங்கள், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பட்டு நகா் அரிமா சங்கத் தலைவா் வேலவன் என்.சீனிவாசன் தலைமை வகித்தாா்

மாவட்டத் தலைவா்கள் சுரேஷ்பாபு, ராஜா, ஜெயக்குமாா், இப்ராஹிம், குமரன், செந்தில்நாதன், விக்ரம், சங்கச் செயலா் அனந்தசயனம், பொருளாளா் சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com