அனக்காவூா் ஒன்றிக் குழுக் கூட்டம்

அனக்காவூா் ஊராட்சி ஒன்றிக் குழுவின் மாதாந்திர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனக்காவூா் ஊராட்சி ஒன்றிக் குழுவின் மாதாந்திர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் திலகவதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருணா முன்னிலை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ரவி, பொறியாளா்கள் முனியப்பன், ராமு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

உறுப்பினா்கள் பேசுகையில், ஏழைகளுக்கு பசுமை வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப் பகுதியில் கட்டப்படும் தடுப்பணைப் பணிகளில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாதாந்திர மன்றக் கூட்டத்தில் பிற துறை அலுவலா்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கிராம வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com