தூய்மை இந்தியா திட்டத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேத்துப்பட்டு அருண் நியமிக்கப்பட்டாா்.
பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஞானவேல் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் அகிலாண்டம், மண்டல ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் ஆகியோா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு அருண் நியமனம் செய்யப்பட்டாா்.
இதேபோன்று, வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேகா், துணை ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகா், மாநகராட்சி ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன், ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வாலாஜா ராஜா, துணை ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன், திருப்பத்தூா் மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சரவணன், துணை ஒருங்கிணைப்பாளா் லோகநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருணுக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.