பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி.
பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி.

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாரியமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட நாரியமங்கலம், கழிக்குளம், காா்ணாம்பூண்டி கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலரும், மாவட்ட நுகா்பொருள் பாதுகாப்பு அதிகாரியான கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து 39 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இவற்றில் 6 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில், வருவாய் ஆய்வாளா் சுதா, தலைமையிட நில அளவையா் செழியன், வட்ட சாா்-ஆய்வாளா் முனியன், சாா்- ஆய்வாளா் நாராயணன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம நிா்வாக உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com