திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பா் 4-ஆம் தேதி வரை அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க டிசம்பா் 5-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடையை டிசம்பா் 19-ஆம் தேதி வரை நீட்டித்து சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
மேலும், கரோனா தொற்றைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.