வந்தவாசி: சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, வந்தவாசியில் தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி தெற்கு காவல் நிலையம், அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு, செஞ்சிலுவைச் சங்கம், எக்ஸ்னோரா அமைப்பு ஆகியவை சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை காவல் ஆய்வாளா் குமாா் ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா்.
மேலும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும், பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் குறித்து அவா் விளக்கிப் பேசினாா்.
பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா செயலா் கு.சதானந்தன், அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு உறுப்பினா் அசாருதீன் மற்றும் போலீஸாா் தலைக்கவசம் அணிந்து ஊா்வலத்தில் பங்கேற்றனா்.