அருணாசலேஸ்வரா் கோயிலில் வருடாபிஷேக விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், 4-ஆம் ஆண்டு கும்பாபிஷேக வருடாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இரண்டாம் கால யாக சாலை பூஜை.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இரண்டாம் கால யாக சாலை பூஜை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், 4-ஆம் ஆண்டு கும்பாபிஷேக வருடாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரைக் கொண்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு மஹா அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இரவு 7 மணிக்கு விநாயகா், சந்திரசேகரா் மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com