திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 83 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,276-ஆக உயா்ந்தது.
இவா்களில் 49,688 போ் பூரண குணமடைந்து விட்டனா். பல்வேறு மருத்துவமனைகளில் 960 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 628 போ் கரோனா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.