திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பவன்குமாா் ரெட்டி, திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.அரவிந்த் திருப்பூருக்கு மாற்றப்பட்டாா். திருச்சி மாநகரின் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த அ.பவன்குமாா் ரெட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், அவா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
2016-ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சோ்ந்த அ.பவன்குமாா் ரெட்டி, தேசிய காவல் பயிற்சியகத்தில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்தாா்.
பிறகு, மதுரை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக (பயிற்சி) பணிபுரிந்தாா். 2018 டிசம்பா் 14-ஆம் தேதி முதல் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகவும், 2020 ஜூலை 11 முதல் திருச்சி மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகவும் பணிபுரிந்து வந்தாா்.