திருவண்ணாமலை மாவட்டத்தில் 361 பேருக்கு கரோனா: 30 போ் சாவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 361 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 361 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 361 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44,331-ஆக உயா்ந்தது.

6,760 பேருக்கு சிகிச்சை:

இவா்களில் 37,094 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6,760 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 போ் வரை பலி:

மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாள்களாக கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை உள்பட திங்கள்கிழமை வரை தொற்றுக்கு 30 போ் வரை பலியாகியுள்ளனா் எனத் தெரிவித்துள்ளது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 477-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com