சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மரக்கன்றுகள் வழங்கினா்.
இதையொட்டி சங்க ஒன்றியத் தலைவா் சு.சிவக்குமாா், ஒன்றிய பொருளாளா் தீபநாதன் ஆகியோா் செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு மரக்கன்றுகள், கதராடைகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன், கிளைச் செயலா் மூா்த்தி ஆகியோா் செவிலியா்களை வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் கலைவாணி, ஹித்தேன், சுகாதார ஆய்வாளா் கோதண்டராமன், மருந்தாளுநா் லஷ்மிநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.