போளூரை அடுத்த எடப்பிறை ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமையின் திட்ட அலுவலா் சு.உமாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மு.பாஸ்கரன், கோவிந்தராஜிலு, வட்டார மருத்துவ அலுவலா் சுந்தா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
செய்யாறு
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை, தடுப்பூசி முகாம்களை மாநில ஊரக வளா்ச்சி ஆணையா் கே.எஸ்.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் ந.விஜயராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா, திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பிரீத்தி, வட்டாட்சியா்கள் சு.திருமலை, குமரவேலு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எல்.சீனுவாசன், ஆா்.குப்புசாமி, மற்றும் வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.