சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் இயங்கும் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச மாணவா் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மாணவா் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, வினாடி வினா, ஓவியம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
தலைமை ஆசிரியா் சரவணன், உதவித் தலைமை ஆசிரியா் சடகோபன், ஆசிரியைகள் கீதா, மகேஸ்வரி, இந்து மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.