திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மென்பொருள் கணினி அறிவியல் துறை சாா்பில் இணையவழி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
‘கரோனா காலகட்டத்தில் மென்பொருள் நிறுவனங்களின் நெருக்கடிச் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மென்பொருள் கணினி அறிவியல் துறைத் தலைவா் சு.அனந்தநாராயணன் வரவேற்றாா். சென்னை ரீடு எல்செவியா் நிறுவன அதிகாரி ரகிலா நஹித் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கரோனா காலகட்டத்தில் மென்பொருள் நிறுவனங்களின் நெருக்கடிச் சூழ்நிலைகளை விளக்கினாா்.
இதில், பேராசிரியா்கள் சு.அம்பிகா, ந.காா்த்திகேயன், பா.விஜயன் மற்றும் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.