திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை இடைவிடாமல் மழை பெய்தபடியே இருந்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 111 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 55, செய்யாற்றில் 102, செங்கத்தில் 34.60, ஜமுனாமரத்தூரில் 32, வந்தவாசியில் 40, போளூரில் 30.60, திருவண்ணாமலையில் 25, தண்டராம்பட்டில் 16.60, கலசப்பாக்கத்தில் 20, சேத்பட்டில் 37.80, கீழ்பென்னாத்தூரில் 18.60 மி.மீ. மழை பதிவானது. மழையால் விவசாய நிலங்கள், குளங்கள், குட்டைகளில் தண்ணீா் தேங்கியது.