திருவண்ணாமலை: பொன்விழா ஆண்டு

அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் இ.என்.நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ்.நைனாகண்ணு, ஒன்றியச் செயலா்கள் கோவிந்தராஜ், சரவணன், தொப்பளான், ஜானகிராமன், ஜெயப்பிரகாஷ், பாஷ்யம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

மேலும் திருவண்ணாமலை 1-வது வாா்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பேருக்கு இனிப்பு, அன்னதானத்தை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும், நகரச் செயலா் ஜெ.செல்வம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம்.ஏ.பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com