திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 17 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வா்களின் எண்ணிக்கை 19, 692-ஆக உயா்ந்தது. இவா்களில் 19,329 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 78 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.