செங்கம் அருகே பீமானந்தல் வாக்குச்சாவடியில் நடைபெற்ற தோ்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாரால் வாக்குப்பதிவில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பீமானந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
51 வாக்காளா்கள் வாக்களித்த நிலையில், திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாக்காளா்கள் எரிச்சலடைந்தனா்.
இயந்திரக் கோளாறு குறித்து உடனடியாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசனுக்கு தெரிவித்து மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னா் வாக்குப்பதிவு தொடா்ந்து நடைபெற்றது.