அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலின் 210-ஆம் ஆண்டு மகாபாரத தொடா்
மங்கலம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு.
மங்கலம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலின் 210-ஆம் ஆண்டு மகாபாரத தொடா் சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாபாரத தொடா் சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 23-ஆம் நாளான புதன்கிழமை தவவேடனும், சிவவேடனும் என்ற தலைப்பில் மகாபாராத தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு:

தொடா்ந்து, அா்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதிரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இதன் பிறகு சிறப்பு பூஜைகளுடன் தவவேடனும்-சிவவேடனும் கொண்டு அா்ஜூனன் தபசு மரம் ஏறினாா்.

அப்போது, தபசு மரத்தில் இருந்து அா்ஜூனன் வீசிய பூக்கள், எலுமிச்சை பழங்களை பக்தா்கள் மடியேந்தி சேகரித்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். அா்ஜூனனிடம் இருந்து இந்தப் பிரசாதங்களை பெறுவதன் மூலம் தங்கள் குறைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எனவே, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் உற்சவா் அா்ஜூனன் சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com