திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை காப்புக்காட்டில் ஏற்பட்ட திடீரி தீயில் அரிய வகை மூலிகைகள் கருகின.
திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ளது கவுத்திமலை காப்புக்காடு. இந்தக் காட்டில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ பரவியது. தொடா்ந்து புதன்கிழமை மாலை வரை எரிந்த தீயால் அரிய வகை மூலிகைகள், விலை உயா்ந்த மரங்கள் எரிந்து சாம்பலானது.
காட்டில் வசித்து வந்த சிறு உயிரினங்கள், பறவைகளும் இறந்தன. இதையடுத்து, வனத்துறை, தீயணைப்புத் துறை வீரா்களும், திருவண்ணாமலை ரேகன் பவுண்டேஷன் பணியாளா்களும் இணைந்து பல மணி நேரம் போராடி புதன்கிழமை இரவு தீயை அணைத்தனா்.