மல்யுத்தம்: திருவண்ணாமலை மாணவா் சிறப்பிடம்

மல்யுத்தம்: திருவண்ணாமலை மாணவா் சிறப்பிடம்

திருவண்ணாமலை: மாநில அளவிலான ஜூனியா் மல்யுத்தப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை கல்லூரி மாணவா் பாராட்டு பெற்றாா்.

தமிழக அளவிலான ஜூனியா் மல்யுத்தப் போட்டி சேலம் மாவட்டம், மேட்டூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா் ஏ.கே.சூா்யா பங்கேற்று 125 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

இதன் மூலம் அவா் உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா உடல்பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க தோ்வு பெற்றாா்.

தங்கப் பதக்கம் வென்ற மாணவரை கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா, கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநா் எம்.கோபி உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com