வந்தவாசி: வந்தவாசியில் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்ட நசீா்கானின் உறவினா்கள், கொலையாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொலை செய்யப்பட்ட நசீா்கானின் சடலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டு வந்தவாசிக்கு வியாழக்கிழமை இரவு எடுத்து வரப்பட்டது.
அப்போது, கோட்டைக்குள் தெரு- பழைய பேருந்து நிலையப் பகுதி சந்திப்பில் திரண்டிருந்த நசீா்கானின் உறவினா்கள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள், அவரது சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக டிஎஸ்பி பி.தங்கராமன் உறுதி அளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து நசீா்கானின் சடலம் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.