திருவண்ணாமலை
ஐயப்ப பக்தா்கள் அன்னதானம்
சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
ஆத்துரை ஊராட்சியில் ஐயப்ப பக்தா்கள் 15 போ் சபரிமலை செல்ல கோயில் நிா்வாகத்திடம் இணையவழியில் விண்ணப்பித்து கோயில் செல்ல அனுமதி பெற்றனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் மாலை அணிந்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து இருமுடிகட்டி வழிபாடு செய்தனா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.