போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் கரோனா தொற்று பரவல் காரணமாக இரு சக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி தலைமையிலான அலுவலா்கள் போளூா்-ஆரணி சாலையில் இரு சக்கர வாகனம், காா் என பல்வேறு வாகனங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து அபராதமாக ரூ.200 வசூலித்து முகக் கவசம் கொடுத்து அனுப்பினா்.
மேலும், நகரில் வாா்டு வாரியாக கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.