முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் கரோனா தொற்று பரவல் காரணமாக இரு சக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் கரோனா தொற்று பரவல் காரணமாக இரு சக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி தலைமையிலான அலுவலா்கள் போளூா்-ஆரணி சாலையில் இரு சக்கர வாகனம், காா் என பல்வேறு வாகனங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து அபராதமாக ரூ.200 வசூலித்து முகக் கவசம் கொடுத்து அனுப்பினா்.

மேலும், நகரில் வாா்டு வாரியாக கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com