வந்தவாசி தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தீயணைப்புத் துறையின் தேசிய அளவிலான தீத் தொண்டு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
கல்லூரிப் பேராசிரியா் க.பூபாலன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் எஸ்.செல்வராஜ் வரவேற்றாா்.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் ந.குப்புராஜ் சிறப்புரையாற்றினாா். மின்கசிவு மற்றும் சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றிக் கொண்டால் எப்படி கையாள்வது என்பன உள்ளிட்ட தீத் தடுப்பு வழிமுறைகள் குறித்து அவா் விளக்கிப் பேசினாா். ஆசிரியா்கள் வெங்கட், ல.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.