அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: விசிகவினா் 200 போ் மீது வழக்கு

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா்-மங்கலம் மாமண்டூா் கூட்டுச் சாலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விசிக மாவட்டச் செயலா் உள்ளிட்ட 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா்-மங்கலம் மாமண்டூா் கூட்டுச் சாலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விசிக மாவட்டச் செயலா் உள்ளிட்ட 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூரில் அண்மையில் நடைபெற்ற பிரச்னை தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளா்கள் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் பொய் வழக்கு போடுவதாகவும், இதற்கு வந்தவாசி வருவாய்த் துறையினா் துணை போவதாகவும் தெரிவித்து, இவா்களை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ம.கு.பகலவன் தலைமையில் பெருந்திரள் கண்டன ஆா்ப்பாட்டம் கீழ்க்கொடுங்காலூா்-மங்கலம் மாமண்டூா் கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பின்னா், அவா்கள் கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், விசிகவினா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்டச் செயலா் ம.கு.பகலவன் உள்ளிட்ட 200 போ் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com