திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாகூரிடம், எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.வலியுறுத்தினாா்.
தில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாகூரை சந்தித்த, ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத், ஆரணி தொகுதியில் விளையாட்டில் ஆா்வம் உள்ள இளைஞா்கள் அதிகம் போ் உள்ளனா். இயற்கையாகவே அவா்கள் நல்ல உடல் வளமும், ஆரோக்கியமும் பெற்றுள்ளனா்.
அவா்களை மேலும் ஊக்குவித்து முன்னேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், ஆரணியில் ‘கோ்ள் இந்தியா’ திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்கம் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தாா்.