திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை பங்கேற்று கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இலக்கிய அணி மாவட்டத் தலைவா் தசரதன், நகரத் தலைவா் ஜாபா் அலி, மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.