செங்கத்தில் திமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதற்கான நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை, பன்னீா்செல்வம், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு புதிய உறுப்பினா் சோ்க்கைப் பணியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
கூட்டுறவு சங்கத் தலைவா்கள் அன்பழகன், முருகன், நகர அவைத் தலைவா் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.