செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 2019-20-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஐஎன்டியுசி செயல் தலைவா் குப்புசாமி கலந்துகொண்டு, முனியம்மாள் ராமசாமி நினைவு அறக்கட்டளை சாா்பில், பத்தாம் வகுப்புத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் திவ்யதா்ஷினி, அபிதா, மகாலட்சுமி ஆகியோருக்கு கேடயம், ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் மகேஷ்வரன் நன்றிகூறினாா்.