திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமையில், தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவா்கள் அன்பழகன், தசரதன், வட்டாரத் தலைவா் அன்புதாஸ், விவசாய சங்கத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மாா்கெட்குமாா் தலைமை வகித்தாா்.
ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி கண்டன உரையாற்றினாா். வட்டாரத் தலைவா்கள் சுப்பிரமணி, சொக்கநாதன், மாவட்டச் செயலா் பாரதி, மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, காங்கிரஸ் நகரத் தலைவா் ஆசைமுஷீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.