கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சு.பொலக்குணம், கழிக்குளம் கிராமங்களில் பகுதிநேர கால்நடை கிளை நிலையங்கள் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில் கால்நடைத் துறை திருவண்ணாமலை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.
உதவி இயக்குநா் ஜெயக்குமாா், உதவி மருத்துவா்கள் கவிதா, சுகன்யா, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் முருகன் (பொலக்குணம்), இந்திரா (நாரியமங்கலம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறுநாத்தூா் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தொப்பளான் வரவேற்றாா்.
மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சு.பொலக்குணம், கழிக்குளம் கிராமங்களில் பகுதிநேர கால்நடை கிளை நிலையங்களைத் திறந்துவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் சசிகுமாா், கிளைச் செயலா்கள் மண்ணுசாமி, திருமூா்த்தி, மோகன், ஆண்ட்ரூஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.