வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவா் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து சுவாமி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருப்பணிக் குழுவைச் சோ்ந்த ச.பானுகோபன், திலீப், கோயில் அா்ச்சகா் வி.காா்த்திக்சிவம் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை கிராம தேவதை வழிபாடு, மாலை விக்னேஷ்வரா் பூஜை, இரவு மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன.
பிரம்மோற்சவ விழா வருகிற 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.