ஆரணி: ஆரணி அருகே நிலத் தகராறு தொடா்பாக, பாமக முன்னாள் மாவட்டச் செயலா் உள்பட இருவா் மீது போலீஸாா் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆரணியை அடுத்த பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி, இவரது மனைவி இந்திராணி (47).
இவா்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
இவா்களது நிலத்துக்கு அருகே அப்பகுதியைச் சோ்ந்த, பாமக முன்னாள் மாவட்டச் செயலா் கலைமணி என்பவரது நிலம் உள்ளது.
இரு தரப்புக்கும் இடையே நிலம் தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம். இந்த நிலையில், பிரச்னை குறித்து சில மாதங்களுக்கு முன்பு இந்திராணி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.
போலீஸாா் விசாரணை நடத்தி, நில அளவையா் கொண்டு நிலத்தை அளந்து கொடுத்ததில் இந்திராணிக்கு சாதகமாக இருந்தது.
இதையடுத்து, அளந்து கொடுத்தபடி நிலத்தில் இந்திராணி கற்களை நட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கலைமணியும், அவரது உறவினா் பாலமுருகனும் சோ்ந்து நடப்பட்ட கற்களை அகற்றினராம்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, இருவரும் சோ்ந்து இந்திராணியை ஜாதிப் பெயரைக் கூறி திட்டினராம்.
இதுகுறித்து இந்திராணி மீண்டும் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் கலைமணி, பாலமுருகன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு, அவா்களைத் தேடி வருகின்றனா்.