தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள்.
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள்.

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ.உதயகுமாா், ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் என்.பத்ராச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் துணைத் தலைவா்கள் ஆா்.ஜோதிமணி, என்.குப்புசாமி, செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலா் ஜி.சீனுவாசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டம், பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு பணிக்காலத்துக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்ட ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்.மாசிலாமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com