மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி பலி

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த வடஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால். இவருக்குச் சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழில்கூடத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிலா் வேலை செய்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை பணியில் இருந்த தொழிலாளி திரிலோகி (30) எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

உடனே சக ஊழியா்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தொழில்கூட உரிமையாளா் தனபாலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com