விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு

திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி குடும்பத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உயா்மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி ஏழுமலை குடும்பத்தினா்.
உயா்மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி ஏழுமலை குடும்பத்தினா்.

திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி குடும்பத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை, விவசாயி. இவரது நிலத்தில் உரிய அனுமதியின்றி உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனராம். தகவலறிந்த விவசாயி குடும்பத்தினா் நிலத்துக்குச் சென்று பணிகளை தடுத்து நிறுத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.

போலீஸ் பாதுகாப்புடன் பொருள்களை இறக்க முயன்றபோது ஏழுமலை குடும்பத்தைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்டோா் அருகே இருந்த மற்றொரு மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

முன்னதாக, பொருள்களை ஏற்றி வந்த லாரி முன் படுத்தும் விவசாயி குடும்பத்தினா் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, ஏழுமலை குடும்பத்தினரிடமும், விவசாய சங்கப் பிரதிநிதிகளிடமும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, விவசாயி குடும்பத்தினா் மின் கோபுரத்திலிருந்து இறங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com