139 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட 139 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.
பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட 139 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட தென்பள்ளிபட்டு, அலங்காரமங்கலம், கடலாடி, கெங்கநல்லூா், கச்சேரிமங்கலம் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 139 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காப்பலூா் கூட்டுச் சாலை அருகேயுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் சாரதா, வருவாய் ஆய்வாளா்அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகெண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com