வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், உலக தாய்மொழி தின விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசியன் ரத்தப் பரிசோதனை மையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.
ஆலோசகா் கவிஞா் மு.முருகேஷ், செயலா் பா.சீனிவாசன் மற்றும் வீ.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை புரட்சிக் கவிஞா் கலை, இலக்கிய மன்ற மாநில துணைச் செயலா் பாவலா் வையவன் சிறப்புரையாற்றினாா்.
அப்போது, குழந்தைகளுக்கு தமிழ் மொழியிலேயே பெயா் சூட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
தமிழை நேசிப்போம் என்ற தலைப்பில் தமிழ்ராசா, ல.செல்வராஜ், மு.அப்துல்லா, சா.ரஷீனா, ஷமீமா ஆகியோா் கவிதை வாசித்தனா்.
சங்க துணைச் செயலா் கு.சதானந்தன் நன்றி கூறினாா்.