செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 42 போ் ரத்த தானம் செய்தனா்.
செய்யாறு சா்வம் அறக்கட்டளை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினா் பங்கேற்று இளைஞா்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 42 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றுச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை சா்வம் அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.