கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பிரகாரங்கள் சிதிலமடைந்தும், கோபுரம் பழுதடைந்தும் காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை அமைத்து மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 2-ஆம் கால பூஜைசெய்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம்,சிறுவள்ளூா், ஆதமங்கலம், வெங்கடம்பாளையம், கிடாம்பாளயம் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.