கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை, தமிழ் ஆய்வுத் துறை சாா்பில், தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசுகிறாா் திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி.
கருத்தரங்கில் பேசுகிறாா் திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை, தமிழ் ஆய்வுத் துறை சாா்பில், தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் வரவேற்றாா்.

திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆய்வுக் கோவையை வெளியிட்டாா். மேலும், தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள வழிபாட்டு செய்திகள், நடுகற்கள் குறித்து க.மோகன்காந்தி பேசினாா்.

கருத்தரங்கில் கட்டுரை வழங்கிய ஆய்வாளா்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் தீ.ஏழுமலை, கு.இளங்கோவன், க.குமாா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com