பெண் தொழிலாளியை தாக்கியவா் கைது

கீழ்பென்னாத்தூா் அருகே பெண் தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூா் அருகே பெண் தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம். இதே பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (40). இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். சில தினங்களுக்கு முன்பு வேலாயுதம் வீடு கட்டி வரும் இடத்துக்கு வந்த ஏழுமலை, அங்கு பணியிலிருந்த தொழிலாளா்ளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

மேலும், பணியில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமி (35) என்ற தொழிலாளியைத் தாக்கினாராம். இதைத் தடுக்க வந்த அவரது கணவா் மதியழகனையும் ஏழுமலை தாக்கினாராம். பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com